செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நாங்கல்லாம் வெட்டீஸ்

வர வர நிறைய பேர் என்னைய மாதிரியே சோம்பேறியாகிட்டு வராங்க. இந்த வினய் அண்ணா பேருக்கு ஒரு காமாட்சின்னு ஒரு ப்ளாக்கை ஆரம்பிச்சிட்டு எதுவும் எழுதாம அப்படியே வச்சிருக்காரு. இதுல நாலஞ்சு களவாணிங்க கூட்டு வேற. எல்லாரும் ஒவ்வொரு திசை. ஒழுங்கா சேர்ந்து எழுதுவாங்கன்னு பாத்தா ஒருத்தரும் உருப்படி இல்லை. ம்ஹ்ம் தலையே சரியில்லைன்னா வாலுங்க என்ன பண்ணனும் ஆளுக்கொரு பக்கம் சுத்திட்டு இருக்குங்க.ஒகே நாம எதையாச்சும் கிறுக்குவோம். ஆரம்பிச்சு வச்சு எதுவும் எழுதலைன்னா வேஸ்ட்டா தானே இருக்கும்.

எதாச்சும் எழுதரதுன்னா என்ன எழுத (((((((((((((())))))))))))))))) (யோசிக்கிறேன்)

ஒகே நம்ம கூட்டுல இருக்கர களவாணிகளை பத்தியே எழுதலாம்

முதல்ல கார்த்திகைக்கண்ணன்

கார்த்திகைக்கண்ணன் ஒரு நல்ல படிப்பாளி (?!) ரொம்ப அமைதியானவன். எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் போல. போன்ல ஒரே ஒரு முறை பேசியிருக்கோம். முதல் முறை கூத்துப்பட்டறையில பாத்தப்போ ரொம்ப சைலண்ட் இருக்கர இடம் தெரியாது. ஃப்ரண்ட்ஸை பிடிச்சதும் ரொம்ப ஆட்டம்போட ஆரம்பிச்சிட்டார். இவரை பத்தி அதிகம் தெரியாததுனால இதுக்கு மேல ரீல் விடரது சரியில்லைன்னு நினைக்கிறேன். லிஸ்ட்ல இருக்கர அடுத்தவரை பாக்கலாம்

”விநாயகர்” வினய் :

இவர் பாக்கரதுக்கு நம்ம ஃப்ரண்ட் காட் விநாயகர் மாதிரியே இருப்பார். குட்டியா கத்தையான மீசை, தொப்பை வயிறு, விநாயகர் மாதிரி முகம். இவரோட இண்ட்ரோ இதுவரைக்கும் போதும் இதுக்கு மேல பேசினா தந்தத்தால அடிக்க வந்துடுவார்.
வினய் அண்ணா ரொம்ப நல்லவர். நல்லா வாய்கிழிய பேசலைன்னாலும் வால் தனம் அதிகம். எல்லாருக்கும் ஒவ்வொரு புனைபெயர் வைக்கிரதுல வில்லன் இவர். கூத்துப்பட்டரையில நண்பரா ஆனார். எல்லாரும் அரட்டை அடிக்கரதுக்கு முன்னாடியும் அரட்டையை முடிச்ச பிறகும் நிதானமா வருவார். எல்லாரும் அட்வைஸ் மழை பொழியரதுல ஹீரோ. இவர் வேலை செய்யரதை பாத்தா எறும்புகூட தூக்குபோட்டுக்கிட்டு செத்துடும். அவ்வளவு துடிதுடிப்பான உழைப்பாளி. ஆனா இவருக்கு கிடைச்சிருக்கர டேமேஜர் வெரி சூப்பர். இவருகிட்ட வேலை வாங்குர அவரை தெய்வம்னு தான் சொல்லனும்.

கருத்துகள் இல்லை: