செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

காலைப்பனி


மேகங்கள் உதிர்க்கும்
பூப்பந்தலில்

மேலாடை உடுத்தும்

பச்சைசெடிகள்



காலைப்பனியில்

ஒன்றிணையும்

ஈரக்காற்றும்

பனிக்காற்றும்



சில்லென்ற சோலையில்

சிரித்துவிளையாடும்

பூங்கொடிகளோடு

கானம் பாடும் குயில்களும்



மலையினை மறைத்து

நிற்கும் தென்றல்

காற்றின் தமக்கை

இயற்கையன்னை

மடியில் உறங்கும்

பனிகாற்று!!

கருத்துகள் இல்லை: